பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மேட் இன் கொரியாவால் மகிழ்ச்சியிலிருக்கும் பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகனுக்குக் கிடைத்த அங்கீகாரம்...

News image

பிரியங்கா மோகன்

Updated On :2 ஜூன் 2026, 4:27 pm IST

நடிகை பிரியங்கா மோகனுக்கு மேட் இன் கொரியா திரைப்படம் பல அங்கீகாரங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரைத்துறையில் சரிவிலிருந்த நடிகை பிரியங்கா மோகன், ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படத்தில், தமிழகத்திலிருந்து தென்கொரியா சென்று வாழ்க்கையை வாழ நினைக்கும் பெண்ணின் கதையாக எடுக்கப்பட்டிருந்தது.

இப்படம் இந்திய ரசிகர்களிடம் கவனமடைந்ததுடன் தென்கொரியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நெட்பிளிக்ஸிலும் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக சில வாரங்கள் முன்னணியில் இருந்தது. இதனால், நெட்பிளிக்ஸ் நிர்வாகம் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

தென்கொரிய கௌரவத் தூதரான போது..

தென்கொரிய கௌரவத் தூதரான போது..

தற்போது, தென்கொரிய அரசு பிரியங்கா மோகனைக் கௌரவிக்கும் விதமாக அவரைச் சுற்றுத்துறையின் கௌரவத் தூதராக நியமித்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்ட பிரியங்கா, “தென்கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டது உண்மையிலேயே சிறப்பானது. கொரிய கலாசாரத்தை இந்தியர்களுக்கு என் மூலம் கடத்தியதை ஏற்றுக்கொண்ட தென்கொரிய அரசுக்கும் சுற்றுலாத்துறை அமைப்பிற்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

ஒரே திரைப்படத்தின் மூலம் உலகளவில் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறிய பிரியங்கா மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

The South Korean government has appointed actress Priyanka Mohan as an Honorary Tourism Ambassador.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.