லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அதிகாரத்துக்கு மண்டியிடாத ஒரு அசலான கலைஞனின் தேடல்: ஞானச்செருக்கு

உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக் கொண்டிருக்கும் ஞானச்செருக்கு.

Published On :27 ஜனவரி 2024, 8:49 pm IST

உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக் கொண்டிருக்கும் படம் ஞானச்செருக்கு. மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன். யாரிடமும் உதவி இயக்குனராய் பணி புரியாமல், திரைக்கலையைத் தானாகவே கற்றுக் கொண்டு, சுயாதீனப் படமாக ஞானச்செருக்கை உருவாக்கியுள்ளார் தரணி ராஜேந்திரன்.

Story image

நான்கு வருடக் கடும் உழைப்பில் இந்தப் படத்தை உருவாக்கியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இத்திரைப்படம் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை 7 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது, மேலும் 19 விருதிற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இயக்குநர் பா.ரஞ்சித்  ஞானச்செருக்கு படத்தின் முதல் பார்வையை அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

Story image

இந்தப் படத்தைப் பற்றி ரஞ்சித் கூறுகையில், ‘இன்றைய தமிழ்ச் சூழலில் ஞானச்செருக்கு மிகவும் முக்கியமான படைப்பாக அமையும். தோழர் தங்கள் வட்டத்தில் பகிருங்கள்.குழுவிற்கு துணை நில்லுங்கள்.நன்றி. என்றார்’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.