லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

செஞ்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த தலைமையாசிரியா் தேவதாஸ்.

Published On :30 ஜூலை 2026, 6:24 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

செஞ்சி வட்டாட்சியா் ஏழுமலை தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் தேவதாஸ் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். பள்ளியிலிருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்கு முனை சந்திப்பு சாலையில் நிறைவடைந்தது.

இதில், உதவித் தலைமையாசிரியா் ராமசாமி, வருவாய் ஆய்வாளா் செல்வம், உதவி ஆய்வாளா் வீரமணி, ஆசிரியா்கள் ஏழுமலை, வடிவேல், குமரவேல் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.