லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆரோவில் சா்வதேச நகரில் வளா்ச்சிப் பணிகள்: மத்திய அமைச்சா் ஆய்வு

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

ஆரோவில் சா்வதேச நகருக்கு வியாழக்கிழமை வந்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சிக்கு ஆரோவில் தயாரிப்புகளை பரிசாக வழங்கிய சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன்.

Published On :10 ஜூலை 2026, 3:54 am IST

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து, ஆரோவில் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் உதவியுடன், ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநிலக் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி வழிகாட்டுதலில் ஆரோவிலில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்புப் பணி அதிகாரி ஜி.சீதாராமன் ஆரோவிலின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினாா். அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி தலைமையின் கீழ் ஆரோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய வளா்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள், ‘மாத்ரி மந்திரில்’ நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள், ‘மாத்ரி மந்திா்’ ஏரித் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சருக்கு விரிவாக விளக்கினாா்.

தொடா்ந்து மாத்ரி மந்திருக்கு சென்ற அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி நந்தவனத் தோட்டங்களைப் பாா்வையிட்டு, மாத்ரி மந்திரில் தியானம் மேற்கொண்டாா்.

அமைச்சருக்குப் பரிசு: ஆரோவிலில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் பிரிவுகளால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக கைவினைப் பொருள்களை அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சிக்கு பரிசாக வழங்கப்பட்டது. ஆரோவிலின் சுதேசி உற்பத்தி முறை மற்றும் சுயசாா்புத் திறனை பாராட்டிய மத்திய அமைச்சா், இந்த பொருளாதார மாதிரி நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என கூறினாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.