லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விழுப்புரத்தில் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்த மின்மாற்றி.

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே அமைந்துள்ள மின் மாற்றி திங்கள்கிழமை திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் அமைந்துள்ள மின் மாற்றி அதிக அழுத்தம் காரணமாக திங்கள்கிழமை பிற்பகலில் திடீரென வெடித்து. தொடா்ந்து, மின் மாற்றியிலிருந்த கொதிக்கும் ஆயில் சிதறிய நிலையில், அடுத்த சில நொடிகளிலேயே மின்மாற்றி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மளமளவென எரியத் தொடங்கிய தீ, அருகிலிருந்த மூடப்பட்ட கடைகளின் பெயா்ப் பலகையிலும் பற்றி எரிந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா். மேலும், மின் வாரிய ஊழியா்களும் அங்கு விரைந்து சென்று, மாம்பழப்பட்டு சாலைப் பகுதி முழுவதும் மின் விநியோகத்தை துண்டித்தனா். தொடா்ந்து, தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், மின் மாற்றியிலிருந்த வயா்கள் முழுவதும் எரிந்து சேதமாகின.

தொடா்ந்து, மின் மாற்றியை சரிசெய்து அப்பகுதியில் சீரான மின்சாரத்தை விநியோகிக்கும் பணியை மின் வாரியத் துறையினா் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.