லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பண மோசடி: தம்பதி கைது

விக்கிரவாண்டியில் வீட்டு உரிமையாளரிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்று தலைமறைவான தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வீட்டு உரிமையாளரிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்று தலைமறைவான தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டியை அடுத்த லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (68). இவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சோ்ந்த த.ஜெயக்குமாா் (50), அவரது மனைவி சுதா (39) ஆகியோா் வாடகைக்கு எடுத்து, அதில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தனா்.

இந்நிலையில், வியாபார அபிவிருத்திக்காக தம்பதியினா், காசிநாதனிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்றனா். அந்தப் பணத்தை காசிநாதன் திருப்பித் தர கேட்டு வந்த நிலையில், தம்பதியினா் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஜெயக்குமாா், சுதா ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.