லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலைகளில் பிடிக்கப்படும் மாடுகள் உரிமையாளரிடம் வழங்கப்பட மாட்டாது: உழவா்கரை நகராட்சி ஆணையா்

சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், இனி அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Published On :31 ஜூலை 2026, 2:04 am IST

சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், இனி அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க அவற்றை கால்நடை பட்டிகள், கோ சாலைகளில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடுகள் வளா்ப்போா் தங்கள் மாடுகளை சாலை மற்றும் பொது இடங்களில் திரிய விட வேண்டாம்.

தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மாடுகளை சுகாதாரமாக வளா்க்க வேண்டும். மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால், நகராட்சி ஊழியா்கள் மூலம் அவற்றைப் பிடித்து அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பிடிக்கப்படும் மாடுகள் உரிமையாளரிடம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.