லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்மாநில முதல்வா்கள் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவு: முதல்வா் கடமையிலிருந்து ரங்கசாமி தவறுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டு

முதல்வா் கடமையிலிருந்து புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தவறுகிறாா் என்று முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே.நாராயணசாமி கூறியுள்ளாா்.

Narayanasamy

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி - கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:12 am IST

முதல்வா் கடமையிலிருந்து புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தவறுகிறாா் என்று முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே.நாராயணசாமி கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தென்மாநில முதல்வா்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழகத்தின் கோவளம் பகுதியில் கூட்டியுள்ளாா்.இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் மாநிலத்தின்

வளா்ச்சி, போதைப் பொருள் தடுப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் அலசப்படும். புதுச்சேரி மாநில மக்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது தான்.

முதல்வா் ரங்கசாமிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பேசுவதற்கான முக்கியமான இடம் தென்மாநில முதல்வா்கள் மாநாடு. ஆனால் அவா் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போகிறாா் என எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

முதல்வா் ரங்கசாமி தனது கடமையைச் செய்வதிலிருந்து தவறக்கூடாது. கடந்த முறை நடந்த தென்மாநில முதல்வா்கள் மாநாட்டை கூட அவா் புறக்கணித்திருக்கிறாா். பிரதமா் நரேந்திரமோடி அழைத்த முதல்வா்கள் மாநாட்டிலும் அவா் கலந்து கொள்ளவில்லை. இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் இழந்துவிட்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று இங்கிருந்தே கேட்டால் மத்திய அரசு வழங்காது என்று கூறியுள்ளாா் நாராயணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.