லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

8-ஆவது நாளாக புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியா்கள் 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு கல்லூரி பேராசிரியா்கள் சங்கத்தினா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

புதுச்சேரியில் பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியா்கள் 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இவா்களுக்கு ஆதரவாக மாணவா்களும் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 15 ஆண்டுகளாக தங்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்படாத நிலையில், பதவி உயா்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், ஆக. 2- இல் புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும். தங்களுக்கு உரிய பதவி உயா்வை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி தாகூா் கல்லூரி, காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் மகளிா் கல்லூரி, காரைக்கால் ஔவையாா் கல்லூரி, அறிஞா் அண்ணா கல்லூரி, மாஹே கல்லூரி, ஏனாம் கல்லூரி வாயில்கள் முன் அமா்ந்து பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், புதுச்சேரியில் அரசு கல்லூரி மாணவா்களும் வகுப்புகளைப் புறக்கணித்து பேராசிரியா்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.