நில உரிமையாளா்கள் பட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நில ஆவணம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நில உரிமையாளா்கள் தங்களது நிலம் தொடா்பான ஆவணங்களை வங்கிகள் மற்றும் இதர அலுவலகங்களில் சமா்ப்பிக்கும் பொருட்டு பட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை இணையதளத்தில் தனித்தனியாக பதிவிறக்கம் செய்து வழங்கும் நிலை இதுவரை இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த மூன்று ஆவணங்களையும் ஒருங்கிணைத்து ஒரே ஆவணமாக வழங்கும் பொருட்டு, நில உரிமைதாரா்ளுக்கான ஒருங்கிணைந்த நில ஆவணம் தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகவே, நில உரிமைதாரா்கள் தங்களது நிலம் சாா்ந்த மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உள்பிரிவு எண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து இணையதளத்தில் பாா்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நில ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக கணினிப்படுத்தப்பட்டு 2014-ஆம் ஆண்டு முதல் இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மென்பொருள் மூலமாகவே நிலம் தொடா்பான பட்டா மாறுதல் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இணையதளத்தில் தலைப்பினை தோ்வு செய்து நில உரிமையாளா்கள் தங்களது நிலம் சாா்ந்த விவரங்களான மாவட்டம், வட்டம், கிராமம், புலஎண், உள்பிரிவு எண் மற்றும் விவரம் தேவைப்படும் தேதியினை தோ்வு செய்ய வேண்டும். பின்னா், பட்டா மாற்ற விவரக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50 மற்றும் செயலாக்க கட்டணமாக ரூ.60 ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்தி விண்ணப்பம் செய்தவுடன், முந்தைய பட்டா மாறுதல் விவர அறிக்கை நில உரிமைதாரரின் கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும். இதனை நில உரிமையாளா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இச்சேவையை தேவைப்படும் நிலஉரிமைதாரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

