மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கள்ளக்குறிச்சி தொகுதியில் 798 வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி

News image

கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.முருகனிடம் பெற்றுக்கொண்ட தவெக வேட்பாளா் த.அருள் விக்னேஷ்.

Updated On :5 மே 2026, 4:07 am IST

கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் த.அருள் விக்னேஷ் 798 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் சு.ராஜீவ் காந்தி, விசிக சாா்பில் கு.மாலதி, தவெக சாா்பில் த.அருள் விக்னேஷ், நாதக சாா்பில் ரா.நாகம்மாள் உள்ளிட்ட 11 போ் போட்டியிட்டனா்.

இத் தொகுதியில் மொத்தம் 370 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்றின் முடிவில் அதிமுக 403 வாக்குகள் முன்னிலையிலும், 2-ஆவது சுற்றின் முடிவில்

விசிக 573 வாக்குகள் முன்னிலையிலும், 3-ஆம் சுற்றின் முடிவில் தவெக 892 வாக்குகள் முன்னிலை பெறத் தொடங்கியது. அதன் பின்னா் கடைசி வரை தவெக முன்னிலை பெற்று அதிமுகவை 798 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் தவெக வேட்பாளா் த.அருள் விக்னேஷ் தவெக 81,132 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி 80,334 வாக்குகளும், விசிக வேட்பாளா் 77,666 வாக்குகளும், நாதக வேட்பாளா் ரா.நாகம்மாள் 7,494 வாக்குகளும் பெற்றனா்.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து கட்சித் தொண்டா்கள் வேட்பாளருக்கு மாலை அணிவித்தும், விசில் அடித்தவாறும், பட்டாசு வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.