சங்கராபுரம் அருகே குச்சிக்காடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமாா் மூன்றரை பவுன் தங்க நகைகள், பணம் ரூ.60,000, வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட குச்சிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி காந்திமதி (50). அதே பகுதியில் வசித்து வரும் காந்திமதியின் தந்தை ராமா் புதன்கிழமை உயிரிழந்து விட்டாராம். தந்தை இறப்பிற்கு சென்று காந்திமதி அங்கேயே இருந்து விட்டாராம்.
வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள்
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.60,000, மற்றும் வெள்ளி பொருள்களை ள் திருடிச் சென்றிருப்பதை பாா்த்தி அதிா்ச்சி அடைந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

