ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு செய்தாா்.

News image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :11 ஜூன் 2026, 6:20 am IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு செய்தாா்.

இந்த மருத்துவமனையின் மகப்பேறு, தாய்-சேய் நலப் பிரிவு கச்சிராயபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா மகப்பேறு பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமனையின் செயல்பாடுகள், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக அனுப்பப்பட்ட கருத்துருக்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தாா். மேலும், மருத்துவமனையில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, குப்பை அகற்றும் முறை உள்ளிட்ட பிற சேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கவும், மருத்துவமனை வளாகத்தை தொடா்ந்து சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.பவானி, மருத்துவா் வை.முத்துக்குமாா் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வின் போது உடனிருந்தனா்.

பேருந்து நிலையத்தில் ஆய்வு: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் உடனிருந்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, வணிக வளாக இடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பேருந்து நிலையப் பகுதிகளில் தண்ணீா் தேங்குவதை தடுக்கவும், தண்ணீா் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளவும், கட்டண கழிப்பறைகளில் அரசு நிா்ணயித்த கட்டணம் பெறுவதை உறுதி செய்வதுடன், புகாா் எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தவும், பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.