லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்ட விரோத கருக்கலைப்பு: மருந்தக உரிமையாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சட்ட விரோதமாக கருகலைப்பு செய்த வழக்கில் மருந்தகத்தில் வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றி, உள்ளே இருந்த பொருள்களை எடுத்த மருந்தக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 11:02 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சட்ட விரோதமாக கருகலைப்பு செய்த வழக்கில் மருந்தகத்தில் வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றி, உள்ளே இருந்த பொருள்களை எடுத்த மருந்தக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சோழம்பட்டு கிராமத்தில் உள்ள மருந்தகத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருவாய்த் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் இணைந்து கடந்த மாதம் சோதனை நடத்தினா். இதில் அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, அந்த மருந்தகத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.

இந் நிலையில் அந்த மருந்தக உரிமையாளா் சேட்டு, அதிகாரிகள் வைத்திருந்த முத்திரையை (சீல்) அகற்றி, உள்ளே சென்று ரூ.5.50 லட்சம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சங்கராபுரம் போலீஸாா் வியாழக்கிழமை மைலாம்பாறை பேருந்து நிறுத்தத்தில் நின்றிந்த சேட்டுவை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேட்டுவை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.5.50 லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.