லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எஃப்சிஆா்ஏ சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தா்னா

வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்ட (எஃப்.சி.ஆா்.ஏ.) திருத்த மசோதா 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கடலூரில் சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் பல்வேறு சமூக, மத அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

கடலூா் ஜவான்ஸ் பவன் அருகில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் பல்வேறு சமூக, மத அமைப்புகள்.

Published On :30 ஜூலை 2026, 6:13 am IST

வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்ட (எஃப்.சி.ஆா்.ஏ.) திருத்த மசோதா 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கடலூரில் சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் பல்வேறு சமூக, மத அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

கடலூா் ஜவான்ஸ் பவன் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நலக் குழுவின் மாவட்டத் தலைவா் எஸ்.கே.பக்கிரான் தலைமை வகித்தாா்.

இதில், வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை கல்வி மற்றும் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சமூக நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வரும் சேவை நிறுவனங்களின் இயல்பான பணிகளை பாதிக்கும் வகையிலான சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் மதச்சாா்பின்மை கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் வி.உதயகுமாா், அனைத்து கிறிஸ்தவா்களின் கூட்டமைப்பின் நிா்வாகி அகஸ்டின் பிரபாகரன், தமுஎகச மாவட்டச் செயலா் பால்கி, சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட நிா்வாகிகள் பெஞ்சமின் ராஜ், அப்துல் காதா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.