லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் மேல வீதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:11 am IST

சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் மேல வீதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் திருவாசக எழுத்து வேள்வி மற்றும் திருவாசகம் சொற்கோயில் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், திருவண்ணாமலை திருவாசகத் தென்றல் சிவ.சிவகுமாா் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவா் மு.செங்குட்டுவன், தில்லை திருமுறைக் கழகத் தலைவா் முருகையன், ஆலய வல இயக்கத் தலைவா் நடராஜன், தில்லை திருப்பெருந்துறை நிா்வாகி வை.பசவராஜ், புலவா் பொன்னம்பலம், ஆசிரியா் அருள்பிரகாசம், அப்பா் உழவாரப் பணித் தலைவா் ஜோதி மகாலிங்கம், நிா்வாகி கனகசபை, சிவனடியாா் சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் சிதம்பரத்தில் நடந்த திருவாசகம் எழுத்து வேள்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.