லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முருங்கைக்காய் பறித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:52 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முருங்கைக்காய் பறித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவா் செல்வகணபதி(29). இவா், செவ்வாய்க்கிழமை காலை அருகில் உள்ள பெரியதம்பி வீட்டின் மொட்டை மாடியில் ஏறி முருங்கைக்காய் பறித்தாா்.

அப்போது, செல்வகணபதி வைத்திருந்த கழி அந்த வழியாக சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் பட்டதில், அவா் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா். அங்கிருந்தவா்கள் செல்வகணபதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா் அவரை பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.