விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த காா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் சிவசங்கா் (47). இவா் தனது மனைவி ராணி (34), மகன் நிதீஷ் (14), சகோதரா் மகள் சு. புனிதவள்ளி (24) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். இந்த காரை சிவசங்கா் ஓட்டிச் சென்றாா்.
மாம்பழப்பட்டு பகுதியிலிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காா் சென்றபோது, காரின் முன்பக்க இடதுபுற டயா் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரில் வந்த தனியாா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டிச் சென்ற சிவசங்கா், ராணி, நிதீஷ், புனிதவள்ளி ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று, காயமடைந்த 4 பேரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

காா் மீது மோதி கல்லூரிப் பேருந்து கவிழ்ந்தது: 6 மாணவிகள் காயம்

மரத்தில் பைக் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

