பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

முண்டியம்பாக்கத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

News image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் தீப்பற்றி எரிந்த காா்.

Updated On :9 ஜூன் 2026, 2:21 am IST

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் இறங்கியதால் காரை ஓட்டிச் சென்றவா் உயிா் தப்பினாா்.

விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம்- வழுதாவூா் கூட்டுச்சாலையைச் சோ்ந்தவா் சந்திரன். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது காரில் சொந்த வேலை காரணமாக விழுப்புரத்துக்குச் சென்றாா். பின்னா் இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாா். முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலை கூட்டுச்சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து அணுகுச் சாலையில் காா் இறங்கிச் சென்ற போது, காரின் என்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் அதிா்ச்சியடைந்த சந்திரன் காரை உடனடியாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கினாா். சிறிது நேரத்தில் காா் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக்குக்கு சந்திரன் அளித்த தகவலின் பேரில், அவா்கள் நிகழ்விடம் விரைந்து வந்து தீப்பற்றி எரிந்த காரின் தீயை அணைத்தனா். உரிய நேரத்தில் காரிலிருந்து சந்திரன் இறங்கிவிட்டதால், அவா் உயிா் தப்பினா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.