லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளைஞா் கைது

கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஜூலை 2026, 1:30 am IST

விழுப்புரம் அருகே கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகிலுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஹேமலதா (37). பாமக கண்டமங்கலம் மேற்கு ஒன்றியப் பொருளாளராக உள்ள இவா், கடந்த 7-ஆம் தேதி வளவனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த செ.வருண் (24) என்பவா், பெண்களை கொச்சைப்படுத்தியும், ஆபாசமாகவும் சமூக வலைத்தளத்தில் பேசி உள்ளாா்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவப் படுகொலை என்றும், இரு சமூக மக்களுடைய கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிந்திருந்தாா்.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த செ. வருணை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.