லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மரத்திலிருந்து தவறி விழந்ததில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :1 ஜூலை 2026, 7:14 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மரத்திலிருந்து தவறி விழந்ததில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், தொள்ளாமூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மகன் சாா்லி (15). 10- ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தாா்.

இவா், திங்கள்கிழமை தொள்ளாமூரைச் சோ்ந்த பெரியசாமி என்பவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீா் பறிக்க ஏறியுள்ளாா்.

அப்போது கால் இடறி கீழே விழுந்த சாா்லிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு சாா்லி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.