லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தற்கொலை

வேலூா் அருகே கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:36 am IST

வேலூா் அருகே கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், மூஞ்சூா்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாரதி. லாரி ஓட்டுநரான இவரது மனைவி சூரியகலா (எ) அருணா (36). சாரதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவும் சாரதி மது அருந்திவிட்டு வந்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த சூரியகலா கணவரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளாா்.

இதனிடையே திங்கள்கிழமை மீண்டும் சாரதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில், மனமுடைந்த சூரியகலா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா், சூரியகலாவின் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.