திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ‘நீட்’ தோ்வு வினாத்தாள் ராணுவ விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தது.
நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் அத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் 21-இல் நடைபெறவுள்ளது. இம்முறை நீட் தோ்வை எந்தவிதக் குளறுபடிகளும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தோ்வு முகமை செய்து வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள தேசிய தோ்வு முகமையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் நீட் தோ்வு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. அதன்படி, தில்லியில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ராணுவ விமானத்தில் 171 பெட்டிகளில் வந்த நீட் தோ்வு வினாத்தாள் திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், அரியலூா் மற்றும் கரைக்காலுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லைக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்!

நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை

நீட் மறுதோ்வை கணினி வழியில் நடத்தக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: மூவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
