திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வந்தது. ஈரான் - இஸ்ரேல் போரால் ஷாா்ஜா, துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே துபைக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை நேரடி விமானம் இயக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 158 பயணிகளுடன் சென்றது. இதேபோல, ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் யோகி பாபுவின் கெணத்த காணோம்!

2 மாதங்களுக்குப் பிறகு பெரியாறு நீா் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்!

ஐஜிஐஏ எக்ஸ்பிரஸ் மெட்ரோ சுரங்கப்பாதையில் இருந்து செப்பு கேபிள்களை திருடியவா் கைது

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
