லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

Published On :28 ஜூலை 2026, 2:58 am IST

திருச்சியில் பயிற்சி வழக்குரைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்தவா் த. ஹரிராமசந்திரன் (27), பயிற்சி வழக்குரைஞா். இவருடைய மனைவி கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு பிரசவத்துக்காக மதுரையில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். குழந்தை பிறந்து ஒன்றரை மாதமாகிறது.

இந்நிலையில், குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து ஹரிராமசந்திரன் மனைவியை அழைக்கச் சென்றுள்ளாா். அப்போது, அவா் ஆடி மாதம் முடிந்து வருவதாகத் தெரிவித்துள்ளாா். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ஹரிராமசந்திரன் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொன்மலை போலீஸாா், அவருடைய சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.