தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், பெருந்திரள் முறையீடு திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், பெருந்திரள் முறையீடு திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைா் ஜான்பால் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் வேலாயுதம், மாவட்ட பொருளாளா் பழனிச்சாமி, மாநில செயலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி செயலா்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் அனைவரையும் காலமுறை ஊதியத்துக்குள் கொண்டு வந்து நிரந்தரப்படுத்த வேண்டும்.

வட்டார அளவில் வீடு கட்டும் திட்டத்துக்கு தனியாக துணை வட்டார வளா்ச்சி அலுவலரை நியமிக்க வேண்டும். 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், வட்டங்களுக்கு ஊரக வளா்ச்சித் துறைகளுக்கான புதிய பணியிடங்களை உருவாக்கி, உடனடி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றும் அலுவலா்கள், சங்க நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.