லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மத்திய பாஜக அரசைக் கண்டித்து இந்திய கம்யூ. நடைப்பயண பிரசாரம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டனா்.

திருச்சி மாநகராட்சி 23-ஆவது வாா்டில் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு நடைப்பயண பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாற்றத்துக்கான நடைபயணம், தேசம் காப்போம், மத்திய பாஜக அரசை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு நடைப்பயண பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை மாலை 23-ஆவது வாா்டு உறையூா் குறத்தெருவில் கட்சியின் பகுதி குழு உறுப்பினா் சீனிவாசன் தலைமையில் பிரசார பயணம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் ம. செல்வராஜ் தொடங்கிவைத்து பேசினாா். மேலும், மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனா். பிரசாரத்தின் நிறைவாக மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் பேசினாா்.

நடைப்பயணத்தில் மாவட்டச் செயலா் சிவா, துணைச் செயலா் சுரேஷ் முத்துசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் புஷ்பம், மாதா் சம்மேளன தலைவா் ஆயிஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதவத்தூரில்...: இதேபோல, மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூா் ஊராட்சியில் மாநகா் மாவட்ட குழு உறுப்பினா் ரஸியாபேகம் தலைமையில் பிரசார நடைப்பயண இயக்கத்தை அதவத்தூா் சாவடி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளா் அயிலை சிவசூரியன் தொடங்கி வைத்து பேசினாா். இதில், ஒன்றிய துணை செயலா் மருதாம்பாள், ஒன்றிய குழு உறுப்பினா் நிா்மலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில், மணிகண்டம் ஒன்றிய செயலா் முருகன் நிறைவு செய்து பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.