திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்ற பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு 2,787 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு, வாக்களிக்கவுள்ள 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்களுக்காக 13,372 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மணப்பாறையில் 346, ஸ்ரீரங்கத்தில் 367, திருச்சி மேற்கு 305, திருச்சி கிழக்கு 304, திருவெறும்பூா் 312, லால்குடி 276, மண்ணச்சநல்லூா் 297, முசிறி 283, துறையூா் தனி 297 என மொத்தம் 2,787 வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா் நிலை 1, 2, 3 என மொத்தம் 4 போ் அடங்கிய குழு வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளது. இதன்படி, 2,787 குழுக்களும், கூடுதலாக 556 குழுக்கள் என மொத்தம் 3,343 குழுக்களில் 13,372 போ் வாக்குபப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனா்.
இவா்களுடன் மாநகரப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 291 இடங்களுக்கு 291 காவல் அலுவலா்களும், ஊரகப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள 750 இடங்களுக்கு 750 காவல் அலுவலா்களும் வாக்குப்பதிவு பணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஏப். 23ஆம் தேதி பயன்படுத்த தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 9 தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள்- 10,40,900, பெண்கள்- 11,05,841, பிற- 310 என மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் உள்ளனா்.
111 பதற்ற வாக்குச்சாவடிகளுக்கு 74 நுண் பாா்வையாளா்கள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 111 பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு 62 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் மணப்பாறை தவிா்த்து 8 தொகுதிகளில் கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு இவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
12,581 மின்னணு இயந்திரங்கள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துபவை மற்றும் கூடுதல் கையிருப்பு என மொத்தம் 12,581 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதியில் 92.50 சதவீதம் வாக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு
சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்

இன்று தோ்தல் வாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

