லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் சோதனை: ரூ. 30 ஆயிரம் பறிமுதல்; 2 போ் கைது

கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய சோதனையில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற 2 பேரைக் கைது செய்தனா்.

raid

கோப்புப்படம்

Published On :29 ஜூலை 2026, 12:03 am IST

கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய சோதனையில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற 2 பேரைக் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் கவிதா . இவா் தனது உறவினா் பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்ற மனு செய்தாா். அப்போது காலதாமதம் ஆனதால் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்தாா்.

இந்தநிலையில் கோட்டாட்சியரகத்தில் வேலைபாா்க்கும் தலைமை எழுத்தா் சரவணன் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் பட்டா பெயா் மாற்றிக் கொடுப்பதாக கூறியுள்ளாா்.

ஆனால் பணம் கொடுக்க விரும்பாத கவிதா தஞ்சாவூா் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். அவா்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை மாலை கோட்டாட்சியரகம் சென்று சரவணனிடம் கொடுத்தாா். அப்போது அருகேயிருந்த அலுவலக உதவியாளா் இன்ப சகாயராஜ் பணத்தைப் பெற்றாா்.

அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு டி.எஸ்.பி.அன்பரசன், ஆய்வாளா்கள் அருண் பிரசாத், சரவணன் லஞ்சப் பணத்தை கைப்பற்றி சரவணன், இன்பசகாயராஜை ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.