லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிரதமா் தலைமையில் தமிழக-கா்நாடக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம்.

Published On :27 ஜூலை 2026, 1:03 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக பிரதமா் தலைமையில் கா்நாடக - தமிழக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு - கா்நாடக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா் என்பது மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் நாடகமாகும். பிரதமா் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவா் முன்னிலையில் நீதிபதிகள் குழுவுடன் இரு மாநில முதல்வா்களும் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம், தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய முழுப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500-ம், கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்து 500-ம் விலை அறிவிக்க வேண்டும்.

சம்பா சாகுபடிக்கும் தண்ணீா் கிடைப்பது சாத்தியமற்ற சூழல் உள்ளதால், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் எம். கருணாநிதி, எஸ். பவுல்ராஜ், பொருளாளா் சி. கிருஷ்ணன், துணைத் தலைவா் எம். ஜெயக்குமாா், வி. ராஜூ, மாநில மகளிரணி செயலா் ஆா். மஞ்சுளா, அமைப்பாளா் எம். முகமது சபீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநில நிா்வாகி என். மகேஷ்வரன் வரவேற்றாா். நிறைவாக, சி. தனஞ்செயன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.