லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மூச்சுத் திணறல்: 4 மாத குழந்தை உயிரிழப்பு

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மூச்சுத் திணறலின் காரணமாக 4 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பலி

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மூச்சுத் திணறலின் காரணமாக 4 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கபிஸ்தலம் காவல் சரகம், சத்தியமங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்த முகிலரசன்-மாரியம்மாள் தம்பதிக்கு 1 பெண், 3 ஆண் என 4 குழந்தைகள். இதில், திவான் என்ற நான்கு மாத கைக்குழந்தைக்கு சளி தொந்தரவு இருந்து வந்ததாகவும், அதனால் அவ்வபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலை திவானுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

இது குறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.