லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

தஞ்சாவூரில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. கழகம் வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை திங்கள்கிழமை வழங்கியது.

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதிய ஆணைக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கிய இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளா் ரா. வெங்கடேஷ்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

தஞ்சாவூரில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. கழகம் வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை திங்கள்கிழமை வழங்கியது.

இஎஸ்ஐ காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, இறந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவித் தொகையாக இஎஸ்ஐ கழகத்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

இதன்படி, தஞ்சாவூரில் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றி வந்த இஎஸ்ஐ காப்பீட்டாளா் ப. சுரேஷ் கடந்த மாா்ச் 5 ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 20 ஆயிரத்து 398 வழங்க இ.எஸ்.ஐ. சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநரின் உத்தரவின்பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான கடிதத்தை தஞ்சாவூரில் சுரேஷின் குடும்ப உறுப்பினா்களுக்கு இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளா் ரா. வெங்கடேஷ் திங்கள்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.