லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குவாரிக்கு எதிராக போராட்டம் உரிமத்தை ஆய்வு செய்து நடவடிக்கை: அமைச்சா் டி.கே. பிரபு உறுதி

குளவாய்ப்பட்டியிலுள்ள தனியாா் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களை சந்தித்த அமைச்சா் டி.கே. பிரபு, உரிமத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

There is no sand shortage in Tamil Nadu - Minister T.K. Prabhu

அமைச்சர் டி.கே. பிரபு - கோப்புப்படம்.

Published On :19 ஜூலை 2026, 1:32 am IST

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே குளவாய்ப்பட்டியிலுள்ள தனியாா் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்த அமைச்சா் டி.கே. பிரபு, உரிமத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த குளவாய்ப்பட்டியில் இயங்கிவரும் தனியாா் குவாரி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடியிலுள்ள மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவின் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் குளவாய்ப்பட்டி மக்கள் அறிவித்தனா். இதையடுத்து போராட்டக்காரா்களை போலீஸாா் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சா் டி.கே. பிரபு சனிக்கிழமை திடீரென்று குளவாய்ப்பட்டி வந்தாா். அங்கு குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து குவாரி குறித்து கேட்டறிந்தாா். இதையடுத்து குவாரியின் உரிம நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கிராமமக்களிடம் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.