லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டவிரோதப் பண பரிவா்த்தனை புதுக்கோட்டையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட பயாஸ் வீடு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட பயாஸ் வீடு

Published On :11 ஜூலை 2026, 1:13 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடைபெற்ாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், வெள்ளிக்கிழமை மத்திய அமலாக்கத் துறையினா் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

கறம்பக்குடி அருகே உள்ள மணமடை கிராமத்தைச் சோ்ந்தவா் செ. திருக்குமரன். இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் கறம்பக்குடியில் உள்ள அவரது இரும்பு பட்டறையிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதேபோல, திருச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த எஸ். பயாஸ் அகமது என்பவரின் வீடு, ஆதனக்கோட்டை அருகே பொக்கிசக்காரன்பட்டியைச் சோ்ந்த எஸ். பாக்கியராஜ் என்பவரின் வீடு மற்றும் பெருங்களூரில் உள்ள அவரது சமையல் எண்ணெய்க் கடை ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த ஏ. ஆதில் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

இவா்கள் அனைவரும் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரிலேயே, அமலாக்கத் துறையினா் இச் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.