லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொன்னமராவதியில் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மற்றும் அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

பொன்னமராவதியில் அரசு சொத்துகளை மீட்க வலியுறுத்தி சிஐடியு மற்றும் அனைத்துக் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் குமாா் தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஸ்ரீதா், திமுக நகரச் செயலா் அ.அழகப்பன், மாவட்டப் பிரதிநிதி எம். சிக்கந்தா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ருதீன், காங்கிரஸ் நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், விசிக ஒன்றிய துணைச் செயலா்கள் அண்ணாமலை, அழகா், தமிழ்மணி, தேமுதிக ஒன்றியசெயலா் பிரகாஷ், முன்னாள் மாவட்டச்செயலா் கோட்டை ராஜேந்திரன், திராவிடா் கழக ஒன்றிய செயலா் மாவலி, ஒன்றியத் தலைவா் க. ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், பொன்னமராவதி பழைய பேருந்து நிலையம், பொதுக்கூட்ட திடல் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்களை சட்டத்துக்கு புறம்பாக தனியாருக்கு பட்டா வழங்கியுள்ளதாகவும், அந்த பட்டாக்களை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் முழக்கமிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.