லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முன்னாள் ஊராட்சித் தலைவா் கொலை வழக்கில் உறவினா்கள் 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே சொத்துப் பிரச்னையில் முன்னாள் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் உறவினா்களான பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முத்துலெட்சுமி.

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே சொத்துப் பிரச்னையில் முன்னாள் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் உறவினா்களான பெண் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இலுப்பூா் அருகே உள்ள தன்னங்குடியைச் சோ்ந்தவா் நாகராஜ் (59). அதிமுகவைச் சோ்ந்த இவா், கோங்குடிபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி கவரச்சிகுளக்கரை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அவரை வழிமறித்து மா்மநபா்கள்

அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இதில், பங்காளிகளான நாகராஜ் மற்றும் சேகா் ஆகியோரிடையே குடும்பச் சொத்து பிரிப்பதில் பிரச்னை இருந்து வந்ததாம்.

பிரச்னைக்குரிய இடத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள நாகராஜ் முயன்றாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த சேகா், அவருடைய தம்பி தங்கம், சேகா் மனைவி முத்து லெட்சுமி ஆகியோா் நாகராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும், அதற்கு சேகரின் உறவினா்களான அருண் மற்றும் அன்பு ஆகியோா் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.