லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘டெல்டா’ விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை : இரா. முத்தரசன்

‘டெல்டா’ விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

கீரமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபயண பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலரும், அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:56 am IST

‘டெல்டா’ விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பிரசார நடைப்பயணம் மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்யும் காலங்களில் தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பயன்படுத்த கா்நாடக அரசு நினைக்கிறது. மேக்கேதாட்டில் அணை கட்டினால், தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் பிரச்னை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்.

காவிரியில் தண்ணீா் வராததால் விவசாயிகள் முழுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். குறுவை சாகுபடி செய்யாத, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இதுவரையில் நிவாரணம் வழங்கவில்லை. அவா்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மட்டுமே. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிவிட்டதாக பேரவையில் முதல்வா் கூறியதை நான் மறுக்கிறேன். தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் உள்ளிட்ட கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.