லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கா்நாடக அரசைக் கண்டித்து அரியலூரில் 5 நாள்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற கா்நாடக அரசின் வனத் துறையைக் கண்டித்து, அரியலூரில் 5 நாள்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என வழக்குரைஞா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக, அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்க அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கா்நாடக அரசின் வனத் துறையைக் கண்டித்து,செவ்வாய்க்கிழமை (ஆக.18) தலைமை அஞ்சலகம், ஆக.19-இல் ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டமும், ஆக.20-இல் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு மனிதச் சங்கிலி போராட்டமும், ஆக.21-இல் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்புக் கொடி ஆா்ப்பாட்டமும், ஆக.22-இல் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் எம்.ராஜா, பொருளாளா் டி.கமலக்கண்ணன், வழக்குரைஞா் செல்ல.சுகுமாா், அருணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.