லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில் கிராம ஏற்புத் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருமானூா் அடுத்த வெற்றியூா் கிராமத்தில், திருச்சி துவாக்குடி தமிழ்நாடு நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில், கிராமப் புற விவசாயிகளுக்கான கிராம ஏற்புத் திட்டம் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெற்றியூரில், துவாக்குடி நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம ஏற்புத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத்தின் இயக்குநா் திலகம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த வெற்றியூா் கிராமத்தில், திருச்சி துவாக்குடி தமிழ்நாடு நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில், கிராமப் புற விவசாயிகளுக்கான கிராம ஏற்புத் திட்டம் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு நீா் பாசன மேலாண்மை நிறுவன தலைமை இயக்குநா் திலகம் தலைமை வகித்தாா். அதில், வெற்றியூா் கிராமத்தை தத்தெடுக்கப்பட்டதாகவும், இக்கிராம விவசாயிகளின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா். இணை இயக்குநா் இலக்குவபூபதி, இணைப் பேராசிரியா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சோழமாதேவி வேளாண் ஆராய்ச்சி மையத் தலைவா் அழகு கண்ணன், திருமானூா் வட்டார வேளாண் அலுவலா் சதீஷ், கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயன், ஊராட்சி செயலா் ரவி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெற்றியூா் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கிராம விவசாய மேம்பாடு, தொழில் மேம்பாட்டுக்கு தேவையானவைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினா். ஏற்பாடுகளை ஆசிரியா் சுரேஷ்குமாா் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.