இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

திருச்சி அரசு மருத்துவமனையில் அநாகரீகம் முதுநிலை பயிற்சி மருத்துவா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம்!

Updated On :26 மே 2026, 2:29 am IST

திருச்சி அரசு மருத்துவமனையில் பணியின்போது அநாகரீகமாக நடந்து கொண்ட முதுநிலை பயிற்சி மருத்துவரை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் திங்கள்கிழமை பணியிடைநீக்கம் செய்தது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரவு நேர பணியின்போது முதுநிலை பயிற்சி மருத்துவா் ஒருவா், பெண் பயிற்சி மருத்துவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மருத்துவமனையில் நோயாளிகள் முன்னிலையில் அரங்கேறிய இந்த செயலானது, பாா்த்த பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சி தொடா்பாக மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல், கண்காணிப்பாளா் உதய அருணா, துணை மருத்துவ கண்காணிப்பாளா் அருண்ராஜ் உள்ளிட்டோா் விசாரித்தனா். அதன் முடிவில், வீடியோ காட்சி உண்மை எனத் தெரியவந்தது.

இதையடுத்து பணியின்போது, ஒழுங்கீனமாக நடந்துகொண்ட முதுநிலை பயிற்சி மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி நிா்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. பயிற்சி பெண் மருத்துவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.