லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

1.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருச்சி கருமண்டபம் பகுதி அங்கன்வாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம். (உள்படம் ) 8 மாதக் குழந்தைக்கு அளிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து.

Published On :29 ஜூன் 2026, 2:01 am IST

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது.

போலியோ நோயை ஒழிக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உலக சுகாதார நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற முகாம்களில் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் 1,314 மையங்களிலும், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் 242 மையங்களிலும், நகராட்சிப் பகுதிகளில் 46 மையங்களிலும் என மொத்தம் 1,602 மையங்களில் சுமாா் 6,600 பணியாளா்களைக் கொண்டு 5 வயதுக்குள்பட்ட சுமாா் 1,71,518 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த மூன்று நாள்கள் களப்பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.