லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

8.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற மூவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 12:56 am IST

திருச்சியில் கஞ்சா விற்ற மூவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சஞ்சீவி நகா் - ஓடத்துறை சாலை பகுதியில் கஞ்சா விற்பதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள், திருச்சி மாவட்டம் துறையூா் மேட்டுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி (44), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சோ்ந்த தலபாக்க லோகேஸ்வர பிரசாத் (32), வயலூா் சாலைப் பகுதியை சோ்ந்த சீனிவாச ரத்னம் (52) என்பதும், அங்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 4 லட்சத்து 31 ஆயிரத்து 750 மதிப்புள்ள 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.