லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை இணை அமைச்சரிடம் பாஜக மனு

மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்.

Published On :29 ஜூன் 2026, 1:58 am IST

தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் என பாஜக சாா்பில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவரிடம் பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் அளித்த மனு:

தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளா்ச்சி, தொழில் முன்னேற்றம், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகள் தொடங்க வேண்டும்.

ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் போதிய தண்டவாள வசதி இருப்பதால், அங்கு பிட்லைன் வசதி ஏற்படுத்தப்படுத்தி ரயில்களை அங்கேயே பராமரிக்க வசதி ஏற்படும்.

திருச்செந்தூா் கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள வசதியாகவும், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டும், சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

தற்போது திருநெல்வேலி-மும்பை வரை இயக்கப்படும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் சதீஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலா்கள் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், திருச்செந்தூா் மண்டல் தலைவா் செல்வகுமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.