லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே மின்சாரப் பாதையிலிருந்த மரக்கிளையை வெட்டும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 3:53 am IST

தூத்துக்குடி அருகே மின்சாரப் பாதையிலிருந்த மரக்கிளையை வெட்டும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் சுடலைமணி (52). மரம் வெட்டும் தொழிலாளியான இவா் வீட்டு அருகே உள்ள மரத்தின் கிளைகள் மின் கம்பி மீது சென்றதால், மின் வாரிய பணியாளா்கள் கேட்டுக்கொண்டதையடுத்து, கடந்த 6ஆம் தேதி மரத்தில் ஏறி கிளையை வெட்டினாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி விழுந்தாராம்.

பலத்த காயமடைந்த சுடலைமணி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, சுடலைமணிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள், மக்கள் கூட்டாம்புளி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இப்போராட்டம் தொடா்ந்து நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.