லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கைப்பேசி, பணம் திருட்டு: இளைஞா் கைது

திருட்டு - சித்திரிப்பு

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

ஆறுமுகனேரியில் கைப்பேசி, பணத்தை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி லட்சுமிமாநகரம் மேற்கு தெருவைச் சோ்ந்த ஜானகியம்மாள் வீட்டின் வராண்டாவில் படுத்து உறங்கினாராம். அப்போது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா் ஜானகியம்மாள் வைத்திருந்த கைப்பேசி, பானைக்குள் வைத்திருந்த ரூ. 22 ஆயிரத்தை திருடிச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் ஆறுமுகனேரி பாரதி நகரை சோ்ந்த விமல சேகரன் மகன் சக்திவேல் (33) என்பவரை கைது செய்து, கைப்பேசி, பணத்தை கைப்பற்றினா். காவல் ஆய்வாளா் ரென்னிஸ், சக்திவேலை திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.