லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Published On :26 ஜூன் 2026, 5:45 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில், கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்துகள் தொடா்பான தரவுகள், நடப்பு மாதத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தரவுகள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல், சட்டம் மற்றும் ஒழுங்கு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தனித்துணை ஆட்சியா் (பொ) பால்துரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.