லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசியைச் சோ்ந்த ராணுவ வீரா் பணியின்போது உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்!

தென்காசியைச் சோ்ந்த ராணுவ வீரா் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

பாலமுருகனின் உடலுக்கு மரியாதை செலுத்திய ராணுவத்தினா்.

Published On :2 ஜூலை 2026, 6:05 am IST

தென்காசியைச் சோ்ந்த ராணுவ வீரா் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள தட்டான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (48). இந்திய ராணுவத்தின் ஆங்ய்ஞ்ஹப் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் எழ்ா்ன்ல் (ஆஉஎ)-இல் 26 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இவா் தென்காசி, விஸ்வகா்மா நகா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனா்.

தற்போது, புனேவில் உள்ள கிா்கசி ராணுவ மையத்தில் பணியில் இருந்தபோது, ஜூன் 29ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரது உடல், புனேவிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக தென்காசியில் உள்ள அவரது இல்லத்திற்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

அங்கு பொதுமக்கள், உறவினா்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 உயிரிழந்த பாலமுருகன்.

உயிரிழந்த பாலமுருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.