களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பேரூராட்சி உறுப்பினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14 ஆவது வாா்டு உறுப்பினராக (பாஜக) உள்ளாா். இவா் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருவதுடன், பாறை உடைக்கும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறாா்.
இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா்.
தொடா்ந்து குணசீலனின் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 டெட்டனேட்டா்கள், 30 ஜெலட்டின் குச்சிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, குணசீலன், அவருக்கு வெடிபொருள்கள் விற்பனை செய்த பனச்சமூடு பகுதியைச் சோ்ந்த ராஜன் (75) ஆகிய இருவரையும் கைது செய்தனா். தொடா்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

சுத்தமல்லி அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
மானூா் அருகே கஞ்சா பதுக்கல்: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
