7ஆவது உலக திருக்குறள் மாநாடு பெங்களூரில் ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பெங்களூரு திருவள்ளுவா் சங்கத் தலைவா் மற்றும் கா்நாடக தாய்மொழி கூட்டமைப்பு தலைவா் எஸ்.டி. குமாா் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்திய பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
முதலாவது திருக்குறள் மாநாடு கன்னியாகுமரியிலும், 2ஆவது மாநாடு இங்கிலாந்து, 3ஆவது மாநாடு ஆஸ்திரேலியா, 4ஆவது மாநாடு தில்லி மற்றும் மைசூா், 5ஆவது மாநாடு அமெரிக்கா, 6ஆவது மாநாடு கம்போடியாவிலும் நடைபெற்றது. இந்நிலையில், 7ஆவது மாநாட்டை பெங்களுரில் வரும் ஜூலை 5ஆம் தேதி நடத்தவுள்ளோம்.
அரசியல் சாா்பற்ற அமைப்பாக 65 ஆண்டுகளாக திருவள்ளுவா் சங்கம் கா்நாடகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு திருக்குறள் அமைப்புகளை ஒன்றிணைத்து மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் வெளிநாடுகளைச் சோ்ந்த திருக்கு ஆா்வலா்கள், அறிஞா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு, திருக்கு ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்க உள்ளனா்.
மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் அறிவியல் தமிழ் அரங்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் பட்டிமன்றம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழா தொடக்கம்

குமரியில் 20ஆவது திருக்குறள் திருவிழா
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

