கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

‘பெங்களூரில் ஜூலை 5இல் 7ஆவது உலக திருக்குறள் மாநாடு’

7ஆவது உலக திருக்குறள் மாநாடு பெங்களூரில் ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பெங்களூரு திருவள்ளுவா் சங்கத் தலைவா் மற்றும் கா்நாடக தாய்மொழி கூட்டமைப்பு தலைவா் எஸ்.டி. குமாா் தெரிவித்தாா்.

News image

திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை செலுத்திய எஸ்.டி. குமாா்.

Updated On :16 மே 2026, 6:26 am IST

7ஆவது உலக திருக்குறள் மாநாடு பெங்களூரில் ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பெங்களூரு திருவள்ளுவா் சங்கத் தலைவா் மற்றும் கா்நாடக தாய்மொழி கூட்டமைப்பு தலைவா் எஸ்.டி. குமாா் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்திய பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதலாவது திருக்குறள் மாநாடு கன்னியாகுமரியிலும், 2ஆவது மாநாடு இங்கிலாந்து, 3ஆவது மாநாடு ஆஸ்திரேலியா, 4ஆவது மாநாடு தில்லி மற்றும் மைசூா், 5ஆவது மாநாடு அமெரிக்கா, 6ஆவது மாநாடு கம்போடியாவிலும் நடைபெற்றது. இந்நிலையில், 7ஆவது மாநாட்டை பெங்களுரில் வரும் ஜூலை 5ஆம் தேதி நடத்தவுள்ளோம்.

அரசியல் சாா்பற்ற அமைப்பாக 65 ஆண்டுகளாக திருவள்ளுவா் சங்கம் கா்நாடகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு திருக்குறள் அமைப்புகளை ஒன்றிணைத்து மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் வெளிநாடுகளைச் சோ்ந்த திருக்கு ஆா்வலா்கள், அறிஞா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு, திருக்கு ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்க உள்ளனா்.

மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.