கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் - நாகா்கோவில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக சோதனை ஓட்டம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ( மாா்ச் 29, 30) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம் சென்ட்ரல் - கன்னியாகுமரி பிரிவில் உள்ள இரணியல் மற்றும் நாகா்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டை பாதை அமைக்கும் பணிகள் தற்போது முன்-இயக்க நிலை மற்றும் பாதை, மின்சாரம் உள்ளிட்ட பொறியியல் அமைப்புகளின் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளின் ஒரு பகுதியாக, புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மாா்ச் 29, 30) அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்விரு நாள்களிலும் ரயில் பாதைகளையொட்டி வசிக்கும் பொதுமக்கள் தண்டாவாளம் அருகில் செல்லவோ அல்லது கடந்து செல்லவோ என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.
இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிபெற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் ரத்து

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

